search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரண்டாவது மனைவி"

    2 சிறுமிகளை பாலியல் தொல்லை செய்த ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கொட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ் (வயது 37). இவர் எல்லைப்பிள்ளை சாவடியில் தனியார் திருமண மண்டபம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே இவரது ஓட்டலுக்கு எதிரே காபி கடை நடத்தி வரும் கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் ராஜிக்கு பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது ராஜி தனக்கு திருமணம் நடக்கவில்லை என கூறி அந்த பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் 15 வயதில் மகள் இருந்தார். மேலும் 16 வயது பெண்ணை வளர்ப்பு மகளாகவும் வளர்த்து வந்தார். அவர்கள் இருவரும் தாயாருடன் வசித்தனர்.

    இதற்கிடையே அந்த 2 சிறுமிகளுக்கும் ராஜ் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

    இதுபற்றி அவர்கள் புதுவை குழந்தைகள் நல கமிட்டியிடம் புகார் கொடுத்தனர். அவர்கள் விசாரணை நடத்தியதில், பாலியல் தொல்லை நடந்தது உண்மை என்று தெரியவந்தது.

    இதனால் புதுவை குழந்தைகள் நல கமிட்டியினர் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தாவுக்கு புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா உத்தரவிட்டார்.

    இதனையடுத்து ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் விசாரணை நடத்தி குழந்தைகள் பாலியல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ராஜை கைது செய்தார்.

    போலீஸ்காரர் வீட்டு முன் 2-வது மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கூடலூரைச் சேர்ந்தவர் அஜ்மல்கான். இவர் கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார்.

    இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்து கடந்த 2001-ம் ஆண்டு பரகத் நிஷா என்பவரை 2-வது திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

    இது தொடர்பான வழக்கு உத்தமபாளையம் மகளிர் போலீசில் நிலுவையில் உள்ளது.

    இதனிடையே கடந்த ஆண்டு அஜ்மல்கான் கெங்குவார்பட்டியைச் சேர்ந்த சர்க்கரையம்மாள் என்பவரை 3-வது திருமணம் செய்து கூடலூரில் வசித்து வருகிறார். இந்த விபரம் 2-வது மனைவி பரகத் நிஷாவுக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் கூடலூர் வந்தார்.

    அங்கு கணவர் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் செய்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில் முறைப்படி விவாகரத்து பெறாமல் 3-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று ஆவேசமாக கூறினார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×